உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

இலங்கைக்கு எதிரான T-20 தொடரை 2:0 எனும் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது!

விளையாட்டுச் செய்திகள் 6 மணி நேரம் முன்
29 பார்வைகள்

இரண்டாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் டி:20 கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ஓட்டங்களை கடந்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் படைத்தார்.

அத்துடன் லியாம் டாசன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சவுதாம்ப்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் டி:20 போட்டியில் 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த போட்டியை நடத்தும் அணி, மேகமூட்டமான சூழலில் நடைபெற்ற அடுத்த போட்டியிலும் இலங்கைக்கு எதிராக இந்த வடிவிலான போட்டிகளில் தொடர்ந்து 14 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

கார்டிஃப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் மேகமூட்டமான சூழலில் நாணய சுழற்சியில் வென்று பந்துவீசத் தீர்மானித்த இங்கிலாந்து அணி இலங்கை அணியை 145 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது.

இலங்கை அணி சார்பில் பத்தும் நிஸ்ஸங்க 37 (21) ஓட்டங்களையும், அணித் தலைவர் சரித் அசலங்க 31 (31) ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் அதிகபடியாக லியாம் டாசன் மூன்று விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பின்னர், 146 ஓட்டம் என்ற இலக்கினை சேஸிங் செய்த இங்கிலாந்து, ஆட்டத்தின் முதல் நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களான அநியூரின் டொனால்ட் (21) மற்றும் பட்லர் (30) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அணியின் ஓட்ட எண்ணிக்கை 55-2 என மாறியது.

அதையடுத்து, அதிரடி ஆட்டக்காரரும் தலைவருமான ஹாரி ப்ரூக் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசிய போதிலும், வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் ஈஷான் மலிங்கவிடம் பிடிகொடுத்து 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் டாம் பேன்டன் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்கள் குவித்து அணியின் நிலையைச் சீராக்கினார்.

இதன் மூலம், 47 பந்துகள் (12.1) ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இங்கிலாந்து அணி மற்றொரு எளிதான வெற்றியை பதிவு செய்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

6 மாதங்களில் முறிந்துபோன கிரிக்கட் வீரரின் நிச்சயம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் பிரித்வி ஷா, சில ஆண்டுகளுக்கு முன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் உள்ளூர் போட்டிகளில் கவனம்…

38 0 0
விளையாட்டுச் செய்திகள்

30 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா

டெஸ்ட் விளையாடும் நாட்டைச் சேர்ந்த வீரர்களில் அதிவேக இருபதுக்கு 20 சர்வதேச சதத்தை அடித்து இந்தியாவின் அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார். புதுடெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில்…

53 0 0
விளையாட்டுச் செய்திகள்

2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கு : ஒக்டோபர் 9ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு டோனிக்கு உத்தரவு!

2013ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பான ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் டோனியின் வாக்குமூலத்தை காணொளியாகப்…

32 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய போட்டிகளுக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஆசியக்…

29 0 0