உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்து; ஓய்வுநிலை ஆசிரியர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
27 பார்வைகள்

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலி – கிளாலி வீதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் 65 வயதான ஓய்வுநிலை ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

கட்டடப் பொருட்களை ஏற்றிச் சென்ற மகேந்திரா ரக வாகனம், ஓய்வுபெற்ற ஆசிரியர் பயணித்த உந்துருளியுடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் உசன் பகுதியைச் சேர்ந்த 65 வயதான சி.சிவகரன் என்ற ஓய்வுநிலை ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்குமாரியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

20 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்.!

கல்முனை பிராந்தியத்தின் மிக முக்கியப் பொது இடமான கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பிரம்மாண்டத் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. முன்மொழியப்பட்டுள்ள…

23 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருட்களுடன் இருவர் கைது.!

வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவை…

21 0 0
இலங்கை செய்திகள்

குட்டி யானை ஒன்று உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட புறநகர் கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும் வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ…

23 0 0