உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

பற்றி எரிந்த கல்லுண்டாய் குப்பை மேடு; அங்கு குவிந்த மக்களால் பரபரப்பு!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
38 பார்வைகள்

நேற்றைய தினம் கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு பற்றி எரிந்ததால் அங்கு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் குப்பைமேடானது நேற்றையதினம் பற்றி எரிந்தது. இதனால் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி சுமார் 2 கிலோ மீற்றருக்கு மேலாக புகை மண்டலத்தால் மூடப்பட்டிருந்தது.

அத்துடன் நவாலி கல்லுண்டாய் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்ளும் நச்சு புகை சென்றது. இதனால் குப்பைமேடு பகுதிக்கு வந்த நவாலி பகுதி மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் இருந்தும் தீயணைப்பு இடம்பெறவில்லை. தீயினை அணைக்குமாறு மக்கள் கூறியும், மாநகர சபையின் பணியாளர்கள், வாகனம் உள்ளே செல்ல முடியாத நிலையில் பாதை உள்ளதாக தெரிவித்தனர். இதனால் கோபமுற்ற மக்கள் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸார் எரியும் இடத்தினை போய் பார்வையிட்ட பின்பு, அந்த இடத்திற்கு செல்வதற்கு வழி சீராக இருப்பதாகவும், உடனடியாக தீயினை அணைக்குமாறும் கூறினர். இருப்பினும் மாநகர சபையினர் அதற்கும் செவிசாய்க்கவில்லை. அதன் பின்னர் பொலிஸார் கடும் தொனியில், தீயை அணைக்குமாறு கூறியபோது அதனை அணைக்க முயன்றனர்.

குறித்த குப்பை மேடானது வாரா வாரம் தொடர்ச்சியாக எரிகிறது. இருப்பினும் இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபையோ, மானிப்பாய் பிரதேச சபையோ அதனை தடுப்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

நேற்றையதினம் கூட குறித்த பகுதிக்கு வந்த மக்கள் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தை ஜெசீதனுக்கு அழைப்பு மேற்கொண்டு அந்த விடயத்தை தெரியப்படுத்தியும், அவர் அங்கு வர முடியாது என்று மறுத்து விட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் பகீரதன், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன், மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று அந்த தீயை அணைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டது அவதானிக்க முடிந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்குமாரியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

20 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்.!

கல்முனை பிராந்தியத்தின் மிக முக்கியப் பொது இடமான கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பிரம்மாண்டத் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. முன்மொழியப்பட்டுள்ள…

24 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருட்களுடன் இருவர் கைது.!

வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவை…

21 0 0
இலங்கை செய்திகள்

குட்டி யானை ஒன்று உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட புறநகர் கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும் வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ…

24 0 0