வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்.!
வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் வாள்வெட்டுக் குழுக்கள் வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் கடந்த வாரத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
