உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

30 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா

விளையாட்டுச் செய்திகள் 5 மணி நேரம் முன்
52 பார்வைகள்

டெஸ்ட் விளையாடும் நாட்டைச் சேர்ந்த வீரர்களில் அதிவேக இருபதுக்கு 20 சர்வதேச சதத்தை அடித்து இந்தியாவின் அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார்.

புதுடெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய அபிஷேக் சர்மா, வெறும் 30 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

இதன்படி அவர், நியூசிலாந்தின் ஃபின் ஆலன் மற்றும் ஸிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரின் 33 பந்து சத சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 34 பந்துகளை எதிர்கொண்ட அவர், 11 ஆறு ஓட்டங்கள் மற்றும் 9 நான்கு ஓட்டங்களுடன் 108 ஓட்டங்களை பெற்றார்.

இதற்கு முன்பு இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக 35 பந்துகளில் அடித்ததே அதிவேக சதமாகக் கருதப்பட்டது.

சர்வதேச 20க்கு 20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். இதற்கு முன்னதாக உள்நாட்டு 20க்கு 20 கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக 28 பந்துகளிலும் அவர் சதம் அடித்துள்ளார்.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 221 ஓட்டங்களை பெற்றது

எனினும், இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

6 மாதங்களில் முறிந்துபோன கிரிக்கட் வீரரின் நிச்சயம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் பிரித்வி ஷா, சில ஆண்டுகளுக்கு முன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் உள்ளூர் போட்டிகளில் கவனம்…

36 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கைக்கு எதிரான T-20 தொடரை 2:0 எனும் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது!

இரண்டாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் டி:20…

27 0 0
விளையாட்டுச் செய்திகள்

2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கு : ஒக்டோபர் 9ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு டோனிக்கு உத்தரவு!

2013ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பான ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் டோனியின் வாக்குமூலத்தை காணொளியாகப்…

30 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய போட்டிகளுக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஆசியக்…

27 0 0