உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
26 பார்வைகள்

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன.

அத்துடன் அவை போர்க் குற்றங்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் உண்மையை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

ஈரானின் மினாப் நகரில் உள்ள ‘ஷாஜரே தயெபே’ (Shajareh Tayyebeh) ஆரம்பப் பாடசாலையின் மீது,கடந்த பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 120 பள்ளி மாணவர்கள் உட்பட 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இது ஒரு தெளிவான பொதுமக்கள் கட்டடம் என்றும், இராணுவ நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் தமது கண்டறிதலில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பழமையான அல்லது புதுப்பிக்கப்படாத இலக்குத் தரவுகளை (Outdated targeting data) அமெரிக்கப் படைகள் பயன்படுத்தியதே இந்தப் பேரழிவிற்கு முக்கியக் காரணம் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று லாமெர்ட் நகரில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பாடசாலைகள் சேதமடைந்ததுடன், 22 குடிமக்கள் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர்.

இந்தநிலையில், இந்த இரண்டு தாக்குதல்களும் கண்மூடித்தனமானவை என்றும், சர்வதேச மனிதநேய சட்டங்களின்படி இவை போர்க் குற்றங்கள் (War Crimes) என்றும் ஐக்கிய நாடுகளின் சுதந்திரமான சர்வதேச உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, போராட்டங்களின் போது ஈரானியக் காவல்துறை மற்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான அடக்குமுறைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் மனித உரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

27 0 0
உலக செய்திகள்

சுவீடன் பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சிக் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி

சுவீடன் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சித் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தான் பதவியிலிருந்து விலகப் போவதாக நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன்…

18 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

ஹோர்முஸ் (Hormuz) நீரிணை வழியாக “சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற” டோகோ (Togo) நாட்டுக்கொடியை ஏந்திய எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இஸ்லாமியப்…

29 0 0
உலக செய்திகள்

மக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்டார் கண்டனம்!

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. புனிதத்…

52 0 0