உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
20 திங்கள்

கிணற்றில் விழுந்த கோழிக் குஞ்சை மீட்க முயன்ற குடும்பப் பெண் மின்சாரம் தாக்கி பலி!

13 பார்வைகள்

யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணிப் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக் குஞ்சை மீட்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வரணிப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் நேசமலர் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒன்பது மாதக் குழந்தை உட்பட இரு பிள்ளைகளின் தாயான இவர், நேற்று சனிக்கிழமை இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வரணிப் பகுதியிலுள்ள 12 அடிப் பாதையூடாகக் கூட்டுறவு நிறுவனம் ஒன்றுக்குச் செல்லும் ‘3 பேஸ்’ மின்சார இணைப்பு, அப்பகுதி மக்களின் குடியிருப்புகளுக்கு மேலாகச் செல்கின்றது. நேற்று, தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக் குஞ்சை மீட்க, இரும்புக் கம்பி ஒன்றின் உதவியுடன் மேற்படி பெண் முயன்றுள்ளார்.

அப்போது, கிணற்றுக்கு மேலாகச் சென்ற மின் இணைப்புக்கு அருகில் இரும்புக் கம்பி சென்றமையால், மின்சாரம் பாய்ந்து பெண்ணைத் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் கிணற்றுக்குள் விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட உறவினர்கள், 10 நிமிடங்களுக்குள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்…

3 0 0
இலங்கை செய்திகள்

தலைமைத்துவம் என்பது அதிகாரமல்ல; பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே.!

“உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல. பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும்” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…

7 0 0
இலங்கை செய்திகள்

மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

அனுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர குளம் பகுதியில், நீர் நிரம்பிய குழியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

13 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு; அரசு இதுவரை தீர்மானிக்கவில்லை.!

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து அரசு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும், இது தொடர்பாக எதிர்க்கட்சியினரே சமூகத்தில் தவறான நிலைப்பாட்டை…

9 0 0