‘ரீல்ஸ்’ காணொளிகள் எடுக்க தமிழக அமைச்சர்களுக்கு அதிரடித் தடை!
அரசு பாடசாலைகளில் அமைச்சர்கள் தேவையற்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், ஆய்வுகளின் போது சமூக வலைத்தளங்களுக்காக ‘ரீல்ஸ்’ (Reels) மற்றும் காணொளிகள் எடுப்பதற்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தடை விதித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து அவர் கடும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுப் பாடசாலைகளுக்குச் சென்று ஆய்வுகள் என்ற பெயரில் காணொளி எடுப்பது போன்ற செயல்களில் அமைச்சர்கள் ஈடுபடக்கூடாது என்றும், தேவையற்ற ஆய்வுகளைத் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமையும் இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு முதலமைச்சர் வழங்கிய இந்த அறிவுறுத்தல், தற்போது அரசியல் மற்றும் கல்வி தரப்புக்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.