உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

இந்தியாவில் கன மழை – 19 பேர் பலி!

இந்திய செய்திகள் 20 மணி நேரம் முன்
39 பார்வைகள்

இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 8 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜௌரி பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் இராணுவ வீரர்களும் மாநில அவசரகால மீட்புக் குழுவினரும் இணைந்து 5 சிறுவர்கள் உட்பட 11 பேரை மீட்டுள்ளனர்.

நாகலாந்தின் மோன் மாவட்டத்திலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பைக் கருதி அமர்நாத் மற்றும் வைஷ்ணோ தேவி ஆலயங்களுக்கான வருடாந்த புனித யாத்திரைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

‘ரீல்ஸ்’ காணொளிகள் எடுக்க தமிழக அமைச்சர்களுக்கு அதிரடித் தடை!

அரசு பாடசாலைகளில் அமைச்சர்கள் தேவையற்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், ஆய்வுகளின் போது சமூக வலைத்தளங்களுக்காக ‘ரீல்ஸ்’ (Reels) மற்றும் காணொளிகள் எடுப்பதற்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தடை விதித்துள்ளார்.…

113 0 0
இந்திய செய்திகள்

ஊழல் முறைப்பாடுகளில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் விஜய் எச்சரிக்கை!

ஊழல் முறைப்பாடுகளில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் என தமிழக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (16) காலை…

96 0 0
இந்திய செய்திகள்

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் நாட்டை வந்தடைந்தன!

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக உடல்களை…

120 0 0
இந்திய செய்திகள்

தமிழகத்தின் ‘நலம் TN’ இணையத்தள சேவையை ஆரம்பித்து வைத்தார் முதல்வர் விஜய்

சென்னை மாநில கல்லூரியில் அரசு மருத்தவ சேவைகளை டிஜிட்டல் முறையில் கொண்டு சேர்க்கும் ‘நலம் TN’ இணையதள சேவையை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். மேலும் மருத்துவ…

110 0 0