உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

சீனாவில் பாரிய நிலச்சரிவு.!

உலக செய்திகள் 15 மணி நேரம் முன்
48 பார்வைகள்

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் 800-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.10 மணியளவில், பெங்சுய் மாவட்டம் ( Pengshui County ) இல் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக சீன அரசின் ஊடகமான CCTV வெளியிட்ட தகவலின்படி, மண் மற்றும் பாறைகள் சரிந்து குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளை சூழ்ந்ததால் பலர் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மாவட்ட நிர்வாகத் தலைவர் ரென் சுஜியாங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
இதுவரை 18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 34 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறதாக குறிப்பிட்டார்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் செங்குத்தான மற்றும் கணிக்க முடியாத நில அமைப்பைக் கொண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மலைச்சரிவின் விளிம்புகளில் இன்னும் தளர்வான பாறைகள் காணப்படுவதால், மீட்புப் பணிகள் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக சீன அரசு 50 மில்லியன் யுவானை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கவும், மீட்புப் பணிகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என உரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, சீன ஜனாதிபதி, நிலச்சரிவுக்கான காரணத்தை விரைவாகக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைத் தடுக்க புவியியல் அபாயங்கள் மற்றும் சாத்தியமான ஆபத்துகளை முழுமையாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது. இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும்,…

96 0 0
உலக செய்திகள்

ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்திய ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல்!

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மைதானத்தில் பதாகை ஏந்திப் போராடிய விவகாரம், தற்போது பிரித்தானிய மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரிய ராஜதந்திர மோதலாக உருவெடுத்துள்ளது.…

57 0 0
உலக செய்திகள்

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அந்தநாட்டு பாதுகாப்பு அமைச்சர் மைக்ஹெய்லே ஃபெடோரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இந்த முடிவு யுக்ரைன் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு,…

80 0 0
உலக செய்திகள்

கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரம் – 754 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதுடன், இதுவரை 754 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம்…

74 0 0