உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

ட்ரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை – ஈரானின் உச்ச தலைவர் காட்டம்!

உலக செய்திகள் 19 மணி நேரம் முன்
49 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது முற்றிலும் நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களால் வௌியிடப்பட்டுள்ள ஈரானின் உச்ச தலைவரின் அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேற்று (18) வௌியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
“அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் திட்டமிட்டு மீறி வருகிறார்.

எனவே, அவரது வார்த்தைகளுக்கோ அல்லது உடன்படிக்கைகளில் உள்ள அவரது கையொப்பத்திற்கோ எந்தவொரு சர்வதேச நாணயமும் இல்லை.”

இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முறிந்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் முதல் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான பரஸ்பர இராணுவத் தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன.

அமெரிக்க இராணுவம் ஈரானின் முக்கிய இராணுவ உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏழாவது இரவாகவும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாகப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

இந்த நிலையில், ஈரானின் தற்போதைய இந்த அரசியல் அறிக்கை மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

தாக்குதலுக்கு மத்தியிலும் மறைமுக இராஜதந்திரப் பேச்சுகள் தொடர்வதாக ஈரான் அறிவிப்பு!

அமெரிக்கா நடத்திய சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுடனான மறைமுக இராஜதந்திரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் வெளிவிவகார அமைச்சின்…

81 0 0
உலக செய்திகள்

ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

ஜோர்தானின் அக்கபா சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் “குறிப்பிட்ட மற்றும் நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்” இருப்பதாகக் கூறி, தமது நாட்டுப் பிரஜைகளை, அந்த பகுதிகளுக்குச்…

51 0 0
உலக செய்திகள்

ஈராக்கில் இருந்து மாற்று வழி ஊடாக எண்ணெயை ஏற்றுமதி செய்யத் தீர்மானம்!

ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பதால் ஈராக்கில் இருந்து சிரியா வழியாக மத்திய தரைக்கடலுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்காக, பழைய எண்ணெய் குழாய் வழியை புதுப்பித்து மீண்டும்…

34 0 0
உலக செய்திகள்

மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்!

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக…

35 0 0