உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

தமிழ் – முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
75 பார்வைகள்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-00ப்

“இந்தக் கூட்டணி இலஞ்ச, ஊழல்களை ஒழிப்பதற்கோ அல்லது நாட்டுக்கு நன்மைகளைச் செய்வதற்கோ உருவானது அல்ல.

மாறாக, திருடர்களையும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களையும் பாதுகாப்பதற்கே இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

இந்தக் கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களில் பலர், கடந்த காலங்களில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தற்போது பிணையில் இருப்பவர்களாவர்.

சிறைத்தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறான தரப்பினர் அரசை வீழ்த்தத் திட்டமிடுகின்றனர்.” – என்றார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர், “எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசை யாராலும் அசைக்க முடியாது.

அவர்கள் கூட்டணிகளை அமைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்து, மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.” – என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

66 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

55 0 0
இலங்கை செய்திகள்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

86 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

55 0 0