உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
15 புதன்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
123 பார்வைகள்

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக அந்த கிராம மக்களிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் குறித்த செய்தியை தனது நிறுவனத்திற்கு அனுப்பியிருந்த நிலையில் அந்த செய்தி குறித்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று கூறி குறித்த தொலைக்காட்சி ஊடகவியலாளருக்கு எதிராக ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன் கையெழுத்து திரட்டி வருவதுடன், குறித்த ஊடகவியலாளரை தொலைபேசியில் அச்சுறுத்தியும் உள்ளார்.

நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் நிலையில் எல்லா செய்திகளையும் தொலைக்காட்சி நிறுவனங்களால் ஒளிபரப்பு செய்ய முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத நகரச சபை உறுப்பினர் அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து திரட்டி வருவது குறித்து ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தங்களுக்கு ஏற்றால் போல் நடக்கவேண்டும் என்று நினைக்கும் அரசியல் வாதிகளால் தான் ஊடகவியலாளர்கள் கூடுதலான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இது குறித்து ஊடக நிறுவனங்களுக்கு புகாரளிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம்; பின்னணியில் அநுர அரசு இல்லை.!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…

50 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் நடராசாவின் தாயார் காலமானார்.!

‘ராவய’ வெளியீடான ‘ஆதவன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பிராசா நடராசாவின் தாயார் திருமதி விசாலாட்சி…

54 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல்.!

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி…

62 0 0
இலங்கை செய்திகள்

உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு.!

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது…

69 0 0