உயர்தர மாணவர்களுக்கான சுய கற்றல் கையேடு வழங்கல்.!
உயர்தர மாணவர்களுக்கான இலவச சுய கற்றல் கையேடு வெளியீடானது வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நேற்றையதினம் இடம்பெற்றது.
உயர் கல்வி விரிவாக்க மீள் எழுகை ஆற்றுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் உயர்தர மாணவர்களுக்கான சுய கற்றல் கையேடுகள் வெளியிடும் நிகழ்வு வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஓய்வுநிலை சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான சண்முகேந்திரன் சுகுணராணி தலைமையில் வெண்கரம் இளையோர் அணியின் நெறிப்படுத்தலுடன் சித்தங்கேணி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெண்கரம் அறக்கட்டளையின் பிரதான செயற்பாட்டாளர்களான திரு சி.திவாகரன் (ஓய்வு நிலை அதிபர் வட்டு மத்திய கல்லூரி, திரு மு. செல்வஸ்தான் (ஓய்வுநிலை அதிபர் ஸ்கந்தவரோதயா கல்லூரி) இருவரும் இணைந்து சுயகற்றல் கையேடுகளை வெளியிட்டு வைத்தனர்.
தொடர்ந்து வாழ்த்துரைகளை மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் பா.பாலசுப்பிரமணியம், சங்கானை ஸ்தான அ.த.க.த பாடசாலை அதிபர் திரு ம. முகுந்தன், சித்தன்கேணி ஸ்ரீ கணேஷ வித்தியாலய அதிபர் திருமதி அ.கலைவாணி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஓய்வுநிலை ஆசிரியருமான ஜீ.சாந்தினிதேவி அவர்கள் அறிமுக உரையினை நிகழ்த்தி கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.
வருகை தந்த மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டு மாணவர்கள், சுய கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல் செயற்பாட்டுடன் வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகனது நிறைவுரையுடன் நிறைவுபெற்றது.
இச்செயற்பாட்டிற்கான அனுசரணையை அமெரிக்கா முத்தமிழ் முன்னேற்ற மன்றம், ஈகை குழுமம், வட அமெரிக்கா இலங்கை தமிழ் பெண்கள் வலையமைப்பு ஆகிய அமைப்பினர் வழங்கியிருந்தனர்.






