உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உயர்தர மாணவர்களுக்கான சுய கற்றல் கையேடு வழங்கல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
108 பார்வைகள்

உயர்தர மாணவர்களுக்கான இலவச சுய கற்றல் கையேடு வெளியீடானது வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நேற்றையதினம் இடம்பெற்றது.

உயர் கல்வி விரிவாக்க மீள் எழுகை ஆற்றுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் உயர்தர மாணவர்களுக்கான சுய கற்றல் கையேடுகள் வெளியிடும் நிகழ்வு வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஓய்வுநிலை சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான சண்முகேந்திரன் சுகுணராணி தலைமையில் வெண்கரம் இளையோர் அணியின் நெறிப்படுத்தலுடன் சித்தங்கேணி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெண்கரம் அறக்கட்டளையின் பிரதான செயற்பாட்டாளர்களான திரு சி.திவாகரன் (ஓய்வு நிலை அதிபர் வட்டு மத்திய கல்லூரி, திரு மு. செல்வஸ்தான் (ஓய்வுநிலை அதிபர் ஸ்கந்தவரோதயா கல்லூரி) இருவரும் இணைந்து சுயகற்றல் கையேடுகளை வெளியிட்டு வைத்தனர்.

தொடர்ந்து வாழ்த்துரைகளை மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் பா.பாலசுப்பிரமணியம், சங்கானை ஸ்தான அ.த.க.த பாடசாலை அதிபர் திரு ம. முகுந்தன், சித்தன்கேணி ஸ்ரீ கணேஷ வித்தியாலய அதிபர் திருமதி அ.கலைவாணி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.

வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஓய்வுநிலை ஆசிரியருமான ஜீ.சாந்தினிதேவி அவர்கள் அறிமுக உரையினை நிகழ்த்தி கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.

வருகை தந்த மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டு மாணவர்கள், சுய கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல் செயற்பாட்டுடன் வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகனது நிறைவுரையுடன் நிறைவுபெற்றது.

இச்செயற்பாட்டிற்கான அனுசரணையை அமெரிக்கா முத்தமிழ் முன்னேற்ற மன்றம், ஈகை குழுமம், வட அமெரிக்கா இலங்கை தமிழ் பெண்கள் வலையமைப்பு ஆகிய அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0