உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

உயர்தர மாணவர்களுக்கான சுய கற்றல் கையேடு வழங்கல்.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
73 பார்வைகள்

உயர்தர மாணவர்களுக்கான இலவச சுய கற்றல் கையேடு வெளியீடானது வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நேற்றையதினம் இடம்பெற்றது.

உயர் கல்வி விரிவாக்க மீள் எழுகை ஆற்றுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் உயர்தர மாணவர்களுக்கான சுய கற்றல் கையேடுகள் வெளியிடும் நிகழ்வு வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஓய்வுநிலை சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான சண்முகேந்திரன் சுகுணராணி தலைமையில் வெண்கரம் இளையோர் அணியின் நெறிப்படுத்தலுடன் சித்தங்கேணி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெண்கரம் அறக்கட்டளையின் பிரதான செயற்பாட்டாளர்களான திரு சி.திவாகரன் (ஓய்வு நிலை அதிபர் வட்டு மத்திய கல்லூரி, திரு மு. செல்வஸ்தான் (ஓய்வுநிலை அதிபர் ஸ்கந்தவரோதயா கல்லூரி) இருவரும் இணைந்து சுயகற்றல் கையேடுகளை வெளியிட்டு வைத்தனர்.

தொடர்ந்து வாழ்த்துரைகளை மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் பா.பாலசுப்பிரமணியம், சங்கானை ஸ்தான அ.த.க.த பாடசாலை அதிபர் திரு ம. முகுந்தன், சித்தன்கேணி ஸ்ரீ கணேஷ வித்தியாலய அதிபர் திருமதி அ.கலைவாணி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.

வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஓய்வுநிலை ஆசிரியருமான ஜீ.சாந்தினிதேவி அவர்கள் அறிமுக உரையினை நிகழ்த்தி கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.

வருகை தந்த மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டு மாணவர்கள், சுய கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல் செயற்பாட்டுடன் வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகனது நிறைவுரையுடன் நிறைவுபெற்றது.

இச்செயற்பாட்டிற்கான அனுசரணையை அமெரிக்கா முத்தமிழ் முன்னேற்ற மன்றம், ஈகை குழுமம், வட அமெரிக்கா இலங்கை தமிழ் பெண்கள் வலையமைப்பு ஆகிய அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

62 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

67 0 0
இலங்கை செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த விளக்கம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹக்கீம் மற்றும் ரிஷாட் முஸ்லிம் சமூகத்தின் அதிகாரங்களைத் தமிழ் கட்சிகளிடம் அடகு வைக்கின்றனர்!

முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக்…

46 0 0