உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

யாழ். சிறைச்சாலையின் மேல் ‘ட்ரோன்’ பறக்க விட்டவர் கைது.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
89 பார்வைகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ‘ட்ரோன்’ பறந்தமையால் சிறைச்சாலை நிர்வாகத்திடையே பதற்றம் ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத ‘ட்ரோன்’ ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டது. ‘ட்ரோனை’ அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதேநேரம் இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு சிறை பாதுகாப்பும் உஷார் செய்யப்பட்டது.

இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ‘ட்ரோன்’ அது எனக் கண்டறியப்பட்டது.

பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

62 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

67 0 0
இலங்கை செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த விளக்கம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹக்கீம் மற்றும் ரிஷாட் முஸ்லிம் சமூகத்தின் அதிகாரங்களைத் தமிழ் கட்சிகளிடம் அடகு வைக்கின்றனர்!

முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக்…

46 0 0