ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பழமைவாத வானொலி தொகுப்பாளர் ஹக் ஹெவிட் உடனான நேர்காணலில், ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளவிருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈரானுக்கான ஒரு சோதனை முயற்சியாகவே இருந்தது என்றும், ஆனால் ஈரான் அந்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக ஈரான் அமெரிக்கக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பு வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.