உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
23 பார்வைகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால், நாளை திங்கட்கிழமை முதல் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட அதி அபாய வலயங்களின் எண்ணிக்கை தற்போது 175 ஆக உயர்ந்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 67 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 10 நாள்களில் மட்டும் 11 ஆயிரத்து 764 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் (கடந்த ஜூன் மாதம் முழுவதிலும் 21 ஆயிரத்து 538 பேர் பதிவாகியிருந்தனர்).

இந்த வருடத்தில் இதுவரை 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டில் நாட்டில் ஆகக்கூடிய டெங்கு நோயாளர்கள் (ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 101 பேர்) பதிவாகியிருந்தனர். தற்போது நிலவும் பாதிப்பு விகிதம், மீண்டும் அந்த ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கின்றது என்று சுகாதாரப் பிரிவினர் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலமும், நுளம்பு பெருக்கத்தை ஒழிப்பதன் மூலமும் இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

62 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

67 0 0
இலங்கை செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த விளக்கம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹக்கீம் மற்றும் ரிஷாட் முஸ்லிம் சமூகத்தின் அதிகாரங்களைத் தமிழ் கட்சிகளிடம் அடகு வைக்கின்றனர்!

முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக்…

46 0 0