உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

கிழக்கு மாகாண சேர். ஜோன் டார்பெட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி – கல்முனை ஸாஹிறா மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
23 பார்வைகள்

இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் நாடுபூராக நடைபெறும்  Sir John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுப் போட்டிகள்  (11) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

14 வயதுக்குட்பட்ட ஆண்கள் 100 மீற்றர்  ஓட்டப் போட்டியில் மாணவன் எம்.ஜே. ஹுஸ்னி முதலாம்  இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் , 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் பாடசாலை அணி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாணவன் எப். அஹமட் ஹஸி  இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் 4×50 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் பாடசாலை அணி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், எம்.ஏ.எம். அதீப், ஏ.அதீஸ் ஆகியோர் பங்குபற்றிய போட்டிகளில் திறமைச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.

இச்சாதனைக்கு  ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி, ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS) அவர்களுக்கும் மற்றும் பிரதி அதிபர்கள்,  மாணவனை பயிற்றுவித்த உடற்கல்வி  ஆசிரியர் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், இப் போட்டியில் பங்குபற்றுவதற்கு  ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

62 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

67 0 0
இலங்கை செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த விளக்கம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹக்கீம் மற்றும் ரிஷாட் முஸ்லிம் சமூகத்தின் அதிகாரங்களைத் தமிழ் கட்சிகளிடம் அடகு வைக்கின்றனர்!

முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக்…

46 0 0