உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

தந்தையைக் கொ*லை செய்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் கடற்படைச் சிப்பாய் கைது!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
45 பார்வைகள்

அம்பாந்தோட்டை, தங்காலை, சியம்பலாகொட பகுதியில் வீடொன்றின் முன்னால் முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனான ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் வீட்டின் முன்னாலுள்ள தண்ணீர்க் குழாய்க்கு அருகில் அவர் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மீட்கப்பட்ட சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதால், அவர் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் இளைய மகனான 48 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவர் கடும் மதுபோதையில் இருந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைகளின்படி, மேற்படி சந்தேகநபர் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் தந்தையின் வீட்டிற்குச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

தங்காலை கோட்ட தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களைச் சேகரித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தங்காலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

66 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

55 0 0
இலங்கை செய்திகள்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

86 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

55 0 0