உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

ரணிலும் சஜித்தும் விரைவில் இணைவார்கள் – முஜிபுர் ரஹ்மான் நம்பிக்கை!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
44 பார்வைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ஓரணியில் இணைப்பதற்கான பேச்சுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

    இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

    “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டமைதான் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

    எனவே, எதிர்கால அரசியல் தேவைகளைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினரையும் ஒரே முகாமாக இணைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பேச்சுகள் சுமுகமாக இடம்பெற்று வருகின்றன.” – என்றார்.

    மேலும், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான நேரடிச் சந்திப்புகள் அண்மையில் இடம்பெற்றுள்ளன என்றும், கட்சியின் செயலாளர்கள் மட்டத்திலும் தொடர் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இரு தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

    யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

    66 0 0
    இலங்கை செய்திகள்

    இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

    கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

    55 0 0
    இலங்கை செய்திகள்

    செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

    மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

    86 0 0
    இலங்கை செய்திகள்

    ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

    நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

    55 0 0