மதுபான விற்பனை நிலையங்களின் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடல்.!
நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சத்தியமூர்த்தி ரதிதேவி அவர்களின் தலைமையில் மதுபான விற்பனை நிலையங்களின் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் எனும் தொனிப்பொருளில் நேற்று 2026.03.16 அன்று கலந்துரையாடல் செயலமர்வு நிகழ்வானது ஹோல்புரூக் பௌத்த விகாரை மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அக்கரப்பத்தனை பிரதேச சபை உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர், சபை உத்தியோகஸ்தர்கள் அவர்களுடன் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி, சிறப்பு அதிரடிப்படை பிரிவிற்கான பொறுப்பதிகாரி, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்கான பொறுப்பதிகாரி, லிந்துலை பொலிஸ் பிரிவிற்கான பொறுப்பதிகாரி, டயகம பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் மதுபான கடை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் அற்ற சமுதாயமொன்றை இலங்கையினுள் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்தல் மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மதுபான விற்பனை வியாபார கடைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இக் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.