காஸா அமைதிச் சபை தோல்வி! : சர்வதேச அமைப்புகள் கவலை!!
காஸாவில் நாளாந்தம் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துவரும் இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத் அமெரிக்க அதிகாரிகள் தலைமையிலான காஸா அமைதி சபை (Gaza Board of Peace) தவறிவிட்டதாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச உதவி நிறுவன சங்கத்தின்(AIDA) பணிப்பாளர் அதீனா ரேபார்ன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 2803ஆவது தீர்மானம் மோதல்களைக் குறைப்பதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கியுள்ளது.
எனினும், அமைதி சபையோ அல்லது அனைத்து நாடுகளின் படை உறுதிப்பாடுகளே காஸா விடயத்தில் செயற்படவில்லை.
இந்தநிலையில், நீண்டகால அடிப்படையில், இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்படுகிறதா என்பதை, அமைதி சபை தீர்மானிக்க வேண்டும்” என்று ரேபார்ன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அடிப்படை அளவுகோல்களின்படிப் பார்த்தால், அமைதி சபை முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது என்று சர்வதேச உதவி நிறுவன சங்கத்தின்(AIDA) பணிப்பாளர் அதீனா ரேபார்ன் தெரிவித்துள்ளார்.