கர்நாடகாவில் வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொ@லை – வெளியாகியது பிரேத பரிசோதனை அறிக்கை!
கர்நாடகாவில் மான் வேட்டையாடியதாகக் கூறி மூன்று தமிழர்களை வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அவர்கள் அருகில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று, ஹேலேமுரிதட்டி வனப்பகுதியில் வைத்து குறித்த மூன்று தமிழர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காணாமல் போன மாடுகளைத் தேடியே குறித்த மூவரும் வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
மான் வேட்டையாடியதாகக் கூறி மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணையில் சம்பவத்தின் முழுமையான பின்னணி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.