உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டது அமெரிக்கா!

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
43 பார்வைகள்

இங்கிலாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் ‘பாலஸ்தீன நடவடிக்கை’ (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்க திறைசேரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”பாலஸ்தீன நடவடிக்கை குழு”, 2020 ஜூலை முதல் பல்வேறு பயங்கரவாதச் செயல்களை ஆதரித்துள்ளதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசால் கடந்த 2025ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்கு, தற்போது அமெரிக்காவும் தடை விதித்துள்ளது.

அத்துடன், அமெரிக்காவுக்குள் உள்ள அந்த அமைப்பின் சொத்துகளையும் முடக்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பதிலளித்துள்ள அந்த அமைப்பின் இணை நிறுவனர் ஹுடா அமோரி (Huda Ammori), தாங்கள் செய்த செயல்கள் எப்போதும் உயிர்களைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டவையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அமெரிக்காவின் இந்த செயல் கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent), தீவிரவாதக் குழுக்களின் நிதியாதாரங்கள் முழுமையாகத் துண்டிக்கப்படும் வரை தங்களது பொருளாதார நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுடன் தொடர்புடைய ஆயுத ஆலைகளுக்கு எதிராக நேரடிப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த இந்த அமைப்பு, இங்கிலாந்தில் ஏற்கனவே சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்தத் தடைக்கு எதிராகப் போராடிய 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதும், இதன் சில உறுப்பினர்கள் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஈரானிய நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக, திறந்த சந்தையில் ஒரு அமெரிக்க…

48 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளம் : உதவிக்கரம் நீட்டத் தயாராகும் ஐக்கிய நாடுகள் சபை

நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய…

38 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளம் : 150 ற்கும் அதிகமானோர் பலி!

நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்…

38 0 0
உலக செய்திகள்

அமெரிக்கப் பொருட்களுக்கு கனடாவில் வரி!

அமெரிக்காவுடன் தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராகப் பதிலடித் தீர்வைகளை (Retaliatory Tariffs) கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இரண்டு நாடுகளுக்கு…

61 0 0