உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
51 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஈரானிய நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக, திறந்த சந்தையில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது.

ஈரானில் தசாப்தங்களாக நீடிக்கும் சர்வதேச தடைகள் மற்றும் கடந்த பெப்ரவரி 28 அன்று ஆரம்பித்த அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆகியவை 9.2 கோடிக்கும் அதிகமான மக்களின் பொருளாதார வாழ்வை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளன.

உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் மருந்துகளின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே திண்டாடி வருகின்றனர்.

போருக்கு முன்னர், ஒரு டொலருக்கு அதாவது 20 இலட்சம் ரியால்களைக் கொண்டு சுமார் 4 கிலோ தக்காளி, அரை கிலோ கோழி இறைச்சி மற்றும் ஒரு லீற்றருக்கும் குறைவான சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது.

எனினும், தற்போது அதே தொகையில் பாதியளவான பொருட்களையே கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தக்காளியின் விலை 71 சதவீதத்தாலும், கோழி இறைச்சியின் விலை 74 சதவீதத்தாலும், சமையல் எண்ணெய் 177 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன.

நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின் விலை 642 சதவீதத்தாலும், பரசிட்டமோல் போன்ற அவசியமான மருந்துகள் 93 சதவீதத்தாலும், குழந்தைகளுக்கான பால்மா 95 சதவீதமும் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில், மாதத்தின் இறுதி வரை தங்களது வருமானத்தைக் கொண்டு சமாளிப்பதே தற்போதைய மிகப்பெரிய சவாலாக உள்ளதாக ஈரானிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரானிய அரசின் குறைந்தபட்ச மாத வேதனம் சுமார் 16.6 கோடி ரியால்கள் முதல் 22 கோடி ரியால்கள் வரை உள்ள நிலையில், அன்றாடச் செலவுகளும் மருந்து மாத்திரைகளின் விலைகளும் அதைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளன.

உற்பத்தி முடக்கம், துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மற்றும் வேலையின்மை போன்ற காரணங்களால் ஈரானியக் குடும்பங்களின் கொள்வனவுத் திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காஸா அமைதிச் சபை தோல்வி! : சர்வதேச அமைப்புகள் கவலை!!

காஸாவில் நாளாந்தம் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துவரும் இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத் அமெரிக்க அதிகாரிகள் தலைமையிலான காஸா அமைதி சபை (Gaza Board of Peace) தவறிவிட்டதாக,…

38 0 0
உலக செய்திகள்

பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டது அமெரிக்கா!

இங்கிலாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் ‘பாலஸ்தீன நடவடிக்கை’ (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க திறைசேரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,…

46 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளம் : உதவிக்கரம் நீட்டத் தயாராகும் ஐக்கிய நாடுகள் சபை

நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய…

39 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளம் : 150 ற்கும் அதிகமானோர் பலி!

நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்…

39 0 0