உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!

இந்திய செய்திகள் 1 மணி நேரம் முன்
34 பார்வைகள்

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து பயணிப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பகிரங்கக் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

எனினும், தமிழக வெற்றிக்கழகம் அல்லது விஜய்யிடம் இருந்து கருத்துக்களும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த மௌனம் , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.

சுயமரியாதை அரசியலைப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தாமாக முன்வந்து கூட்டணி விருப்பத்தைத் தெரிவித்தும், ஆளும் கட்சி அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவது தங்களின் கௌரவத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கருதுவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.

எனினும், இப்போதே பகிரங்கமான கூட்டணி உடன்பாட்டை நோக்கி நகர்ந்து கொள்கை ரீதியான அழுத்தங்களுக்குள் சிக்கிக்கொள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை விரும்பவில்லை என்று அந்தக்கட்சி தரப்புக்கள் கூறுவதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

44 0 0
இந்திய செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில…

39 0 0
இந்திய செய்திகள்

கர்நாடகாவில் வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொ@லை – வெளியாகியது பிரேத பரிசோதனை அறிக்கை!

கர்நாடகாவில் மான் வேட்டையாடியதாகக் கூறி மூன்று தமிழர்களை வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அவர்கள் அருகில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக…

62 0 0
இந்திய செய்திகள்

தமிழக வெற்றிக்கழக அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு!

ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதல் பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள…

77 0 0