திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து பயணிப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பகிரங்கக் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
எனினும், தமிழக வெற்றிக்கழகம் அல்லது விஜய்யிடம் இருந்து கருத்துக்களும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த மௌனம் , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.
சுயமரியாதை அரசியலைப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தாமாக முன்வந்து கூட்டணி விருப்பத்தைத் தெரிவித்தும், ஆளும் கட்சி அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவது தங்களின் கௌரவத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கருதுவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.
எனினும், இப்போதே பகிரங்கமான கூட்டணி உடன்பாட்டை நோக்கி நகர்ந்து கொள்கை ரீதியான அழுத்தங்களுக்குள் சிக்கிக்கொள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை விரும்பவில்லை என்று அந்தக்கட்சி தரப்புக்கள் கூறுவதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.