உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
2026 ஆகஸ்ட் 3ஆம் திகதியன்று தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பெண்களைக் குறித்தும், நடிகை ஒருவரைக் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்தநிலையிலேயே குறித்த விவகாரத்தை விசாரித்த தேசிய மகளிர் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மாநில மகளிர் ஆணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.