பாரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை மீண்டும் சந்திக்கலாம்!மத்திய கிழக்கு போர்ச் சூழல் குறித்து நாமல் ராஜபக்ஷ பகிரங்க எச்சரிக்கை
மத்திய கிழக்கில் தீவிரமாகும் போர் சூழல் காரணமாக, இலங்கை மீண்டும் பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ குறிப்பு படி, ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் மார்க்கங்கள் முடக்கப்படுவதால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ச்சி ஏற்படும் என்பதுடன், வெளிநாட்டு எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கான மூலப்பொருள் இறக்குமதி பாதிக்கப்படும்.
நாமல் ராஜபக்ஷ, அரசு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், நாடு மீண்டும் மனிதாபிமான மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டதாகவும், நிர்வாக தவறுகள் பொதுமக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.