மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக தர்மலிங்கம் ரமேஷ் தெரிவு
மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக தர்மலிங்கம் ரமேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் நிர்வாக தெரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக தெரிவில் தர்மலிங்கம் ரமேஷ் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.