உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
41 பார்வைகள்

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் வேலணை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளுக்கான கட்சி பிரதிநிதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக தனித்தனியாக இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இதனை தெரிவித்த மூத்த தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தெரிவிக்கையில் –

“தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், தேர்தல் பின்னடைவுகளே கூட்டணி பற்றிய சிந்தனைகளை எமது தலைவர்களுக்கு ஏற்படுத்தியது.

70 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலே பரந்தளவான தமிழர் கூட்டணி உருவாக காரணமாக அமைந்தது.

ஆரம்பத்தில் அந்தக் கூட்டிணைவில் அப்போதைய மலையக மக்களின் தேசியத் தலைவரான சௌ. தொண்டமானும் முஸ்லிம் மக்களின் தேசியத் தலைவரான அஸ்ரப் அவர்களும் இணைந்திருந்தனர். எனினும், அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனைகள் காரணமாக பின்னாட்களில் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

அவர்களின் தீர்மானம் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

அதேபோன்று, பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்களும் சந்தர்ப்பவாத தீர்மானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

எம்மை பொறுத்தவரையில், மக்களின் நலன்களும் அபிலாசைகளுமே முதன்மைக்குரிய விடயங்களாகும். அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

66 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

55 0 0
இலங்கை செய்திகள்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

86 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

54 0 0