உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
63 பார்வைகள்

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட புலோப்பளை ஊடாக செல்வபுரம் செல்லும் வீதியில் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

தொடர்ந்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட கிளாலி பாடசாலை ஊடாக கடற்கரை செல்லும் வீதியில் 1.2 மில்லியன் ரூபாய் செலவில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நாட்டி வைத்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

62 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

67 0 0
இலங்கை செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த விளக்கம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹக்கீம் மற்றும் ரிஷாட் முஸ்லிம் சமூகத்தின் அதிகாரங்களைத் தமிழ் கட்சிகளிடம் அடகு வைக்கின்றனர்!

முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக்…

46 0 0