உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

தாத்தாவால் பேத்திக்கு நேர்ந்த கொடூரம்.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
65 பார்வைகள்

கம்பளை பகுதியில் 12 வயதுடைய தனது பேத்தியை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் துஷ் பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 54 வயதுடைய நபரை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பளை பொலிஸார், 54 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதவான் சரசி ஸ்ரீ பரணமன், சந்தேகநபரை ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, சந்தேகநபர் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார். பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது மகன்களில் ஒருவரின் மகளாகும். சிறுமியின் தாயார் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுமிக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முறையாக இந்த துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகவும், அதன் பின்னரும் தொடர்ச்சியாக அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

66 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

55 0 0
இலங்கை செய்திகள்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

86 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

55 0 0