உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இன்னும் இரண்டு வாரங்களில் மின் தடை ஏற்படும் அபாயம்! – நாடாளுமன்றில் மொட்டுக் கட் சி எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கையில் நிலவும் டீசல் தட்டுப்பாடு மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பின்னடைவு காரணமாக, இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் மின்சாரத் தடையை அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க எச்சரித்துள்ளார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், நாட்டின் எரிபொருள் கையிருப்பு குறித்து கவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதியளவில் நாட்டில் டீசல் இருப்பு தீர்ந்துவிடும் அபாயம் நிலவுகிறது. தற்போது வருகை தரும் எரிபொருள் கப்பல்களில் பெரும்பாலும் பெற்றோல் மட்டுமே உள்ளதாகவும், மின்சார உற்பத்தியில் டீசல் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


மின்சார உற்பத்தி நடைமுறைகளின்படிமுதலில் குறைந்த செலவுடைய நீர்மின், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே நிலக்கரி மற்றும் டீசல் மின்சாரம் பயன்படுத்தப்பட வேண்டும். எனினும், தற்போதைய தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக டீசலின் மீது அதிகமாகச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


மேலும், நுரைச்சோலை மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் சுமார் 150 மெகாவாட் மின்சாரம் குறைவடைந்துள்ளதாகவும், முழு திறனான 810 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருந்தால் டீசல் தேவையே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.


இந்த குறைபாட்டை ஈடுகட்ட வாரத்திற்கு சுமார் 35 இலட்சம் லீற்றர் டீசலும், மாதத்திற்கு 140 இலட்சம் லீற்றர் டீசலும் கூடுதலாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.மின்சார சபையின் அறிக்கைகளை மேற்கோள் காட்டிய அவர், தற்போதைய நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு அல்லது இரண்டு வாரங்களுக்குள் நாடு மீண்டும் மின்வெட்டு நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் எச்சரித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

65 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

56 0 0