உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

சவுதியில் அனுஜனுக்கு எதிரான வழக்கு: இலங்கை அரசு தீவிர கண்காணிப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
25 பார்வைகள்

சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இவ்வழக்கின் முன்னேற்றங்களைப் பின்பற்றி வருவதோடு, கொழும்பிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்துடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது.

இராஜதந்திர வழிகள் ஊடாகச் சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அனுஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த இலங்கைப் பிரஜைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் அடையாள வேலைநிறுத்தம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைவதாக ரயில் நிலைய…

32 0 0
இலங்கை செய்திகள்

வேலணை பிரதான வீதிகளில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார பாதிப்பு – மக்கள் பெரும் கவலை!

வேலணையின் பிரதான வீதியோரங்களில் இனந்தெரியாத நபர்களால் தொடர்ச்சியாக வீசப்படும் வீட்டுக் கழிவுகள் மற்றும் திண்மக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதுடன், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு…

31 0 0
இலங்கை செய்திகள்

தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினால் குறித்த முறைப்பாடு…

29 0 0
இலங்கை செய்திகள்

விமல் வீரவன்சவின் கருத்துத் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி…

30 0 0