தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினால் குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள், தொடருந்து பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி இழப்புகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.