உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

விமல் வீரவன்சவின் கருத்துத் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
26 பார்வைகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மாஅதிபருக்கு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பாக அமைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அடங்கிய இறுவட்டு (CD) ஒன்றும் இதன்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் சான்றுகளைப் பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினால் குறித்த முறைப்பாடு…

21 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிஹே தெரிவித்துள்ளார். குறிப்பாக, இலகு ரக…

23 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடும்…

22 0 0
இலங்கை செய்திகள்

யாழில் திலீபனின் நினைவுத் திடலில் பொருத்தப்பட்டிருந்த ஒலி எழுப்பிகள் பொலிசாரால் அகற்றல்!

திலீபனை நினைவுகூர்வதற்காக, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட ஒலி எழுப்பிகளை பொலிஸார் அகற்றிச் சென்றுள்ளனர். பொது இடத்தில் உரிய…

29 0 0