உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

மானிப்பாய் தவிசாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்; இளைஞர்கள் கொந்தளிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
55 பார்வைகள்

மக்களது பிரச்சினைகளை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வர முடியாத மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என நவாலி பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரியவருகையில்,
கல்லுண்டாய் குப்பைமேடானது வாரத்தில் இரண்டு தடவையாவது பற்றி எரிகிறது. இன்றும் (நேற்று) இந்த குப்பைமேடானது பற்றி எரிகிறது. இதனால் நமது குடியிருப்புகள் இருக்க முடியாத அளவுக்கு புகை மண்டலமாக காணப்படுகின்றது.

நாங்கள் வீடுகளில் வயோதிபர்களையும், குழந்தை பிள்ளைகளையும் வைத்திருக்கின்றோம். அந்தப் புகையால் அவர்கள் அன்றாடம் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். வீதியால் செல்பவர்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

இதனை தீர்க்குமாறு வருடக்கணக்காக போராடுகின்றோம் ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

குப்பைமேடு எரிகின்ற நிலையில் நாங்கள் அந்த இடத்திற்கு வந்து நின்று மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதனுக்கு அழைப்பு மேற்கொண்டோம். ஆனால் அவர் இங்கு வர முடியாது என மறுத்து விட்டார்.

சாவகச்சேரியில் இடம்பெறுகின்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்று அங்கு நமது தவிசாளர் கலந்து கொள்கிறார். ஆனால் அவரை தெரிவு செய்த எமது பிரச்சினையை தீர்க்கவில்லை. நாங்கள் அல்லல் வரும்போது அழைத்தும் அவர் வரவில்லை.

தெரிவு செய்தது நாங்கள் ஆனால் சாவகச்சேரியிலா போராட்டம் செய்வது? எமது பிரச்சினையை முதலில் தீர்த்து விட்டு தான் வேறு எங்காவது செல்ல வேண்டும். அதை விட்டு நாங்கள் இங்கு அல்லலுறும்போது நீங்கள் அங்கு சென்று படம் காட்டக்கூடாது.

உங்களுக்கு இந்த பதவி தேவையில்லை நீங்கள் உடனடியாக பதவியில் இருந்து விலகுங்கள். மக்களது பிரச்சினையை கருத்தில் கொள்பவர்களுக்கே இந்த பதவி தேவையானது. சபையின் உறுப்பினர் பகீரதன் இந்த இடத்திற்கு வருகை தந்து விரைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றார். அவ்வாறானவர்கள் தான் எமக்கு தேவை. எனவே தவிசாளர் நீங்கள் இந்த பதிவில் இருந்து விலகி விட்டு பகீரதன் அவர்களை தவிசாளர் ஆக்குங்கள். நாங்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் அவர் எமக்கு தீர்வு வழங்குவார் என்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்.!

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக…

19 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டி.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை, இஸ்லாமாபாத் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு…

26 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

25 0 0