ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
ஹோர்முஸ் (Hormuz) நீரிணை வழியாக “சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற” டோகோ (Togo) நாட்டுக்கொடியை ஏந்திய எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பயணம் தடைப்பட்டுள்ளதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், ஈரானுடன் நிலவிவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மீண்டும் ஒரு தீவிரமான தாக்குதல் தொடரை ஆரம்பிப்பது தொடர்பில் தான் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச் சேவைக்குக் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “எனக்கு விரைவில் ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது. நான் உள்ளே நுழைந்து அவர்களை முழுமையாக அழிக்க வேண்டுமா இல்லையா? அது மிகப் பெரிய ஒரு முடிவு. என்னை வைத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.