உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

மக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்டார் கண்டனம்!

உலக செய்திகள் 7 மணி நேரம் முன்
46 பார்வைகள்

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

புனிதத் தலத்தின் மீதான இந்தத் தாக்குதல் முயற்சியை ஒரு வெட்கக்கேடான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என கட்டார் வெளியுறவு அமைச்சு கடுமையாகச் சாடியுள்ளது.

இது குறித்துக் கட்டார் அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

புனிதத் தலங்களின் பாதுகாப்பு, புனிதத்தன்மை மற்றும் அங்கு வருகை தரும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு ஆகியவை ஒருபோதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படவோ அல்லது பிராந்திய மோதல்களில் பயன்படுத்தப்படவோ கூடாது என கட்டார்ர் வலியுறுத்தியுள்ளது.

மேலும், தனது நிலப்பரப்பு, புனிதத் தலங்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சவூதி அரேபியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டார் அரசு முழு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பால் ஏவப்பட்ட ட்ரோன் ஒன்றை வான்வெளியிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாகச் சவூதி அரேபிய இராணுவம் அறிவித்திருந்தது.

எனினும், சவூதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், புனிதத் தலத்தை இலக்கு வைத்துத் தாம் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை எனவும், சவூதி சுமத்தும் குற்றச்சாட்டு ஒரு “அருவருப்பான பொய்” எனவும் விளக்கம் அளித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அதானியை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்த டிக்டொக் நிறுவுனர்

டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதன்மை செல்வந்தராக உருவெடுத்துள்ளார். ங்…

65 0 0
உலக செய்திகள்

சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக ஹவூதி அமைப்பினர் அறிவிப்பு!

யேமனின் மஃரிப் பகுதிக்கு மேல் சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தி ஒன்றை, தரைவழி-வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். இந்த…

41 0 0
உலக செய்திகள்

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசிக்கு 25 வருட சிறைத் தண்டனை!

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசி (Hashim Thaci) மீதான போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு…

52 0 0
உலக செய்திகள்

சூடானில் தங்கச் சுரங்க விபத்து : 70 ற்கும் அதிகமானோர் உயி@ரிழப்பு!

சூடானின் மேற்கு கோர்டோஃபான் (West Kordofan) மாநிலத்தில் அமைந்துள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்து வீழ்ந்த விபத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அல்-நஹூத் (al-Nuhud) நகருக்கு…

46 0 0