மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினராக நலிந்த பிரதீப் பதவியேற்றார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராகத் திரு. நலிந்த பிரதீப் அவர்கள் இன்று மஸ்கெலியா பிரதேச சபை காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர், உபதலைவர், செயலாளர், உறுப்பினர்கள், ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் உள்ளிட்ட பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து இவருக்குத் தமது நல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இவர் தற்போது பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களின் ஆளும் கட்சியோடு இணைந்து தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்த திசாநாயக்க அவர்கள் விளகிய பின்னர் புதிய ஒருவரை ஜக்கிய தேசிய கட்சியின் உயர் பீடம் நியமிக்க வேண்டிய நிலையில் இம் முறை மஸ்கெலியா குடா மஸ்கெலியா பகுதியில் போட்டியிட்ட நலிந்த பிரதீப் நியமனம் செய்ய பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.