உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

இலங்கை – இந்திய சுகாதார அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
108 பார்வைகள்

இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

கிழக்கு திமோரின் திலி நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிலையிலேயே, இம்மாநாட்டின் பக்க அம்சமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை எதிர்கொண்ட அனைத்துக் கடினமான தருணங்களிலும் இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கும் நட்புறவுக்கும், இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பில் தனது நன்றியைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துக்கொண்டார்.

இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, குறிப்பாகக் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வெற்றியடையச் செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைச்சர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

இதற்கு இணையான வகையில், இலங்கையின் ஆரம்ப சுகாதாரச் சேவை அமைப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் அதன் தரத்தை உயர்த்துதல் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

கிராமப்புற மட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகளை மேலும் விரிவாக்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது குறித்தும், அது தொடர்பில் இரு நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும் இதன்போது மேலதிக கவனம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் விரிவான ஜனநாயக அழிப்பு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்!

அரசு விரைவாக ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…

114 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ஆனந்தசங்கரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியைக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

104 0 0
இலங்கை செய்திகள்

இளைஞர்களுக்கான முறையான தேசிய கொள்கையை வகுப்பதே அரசின் முதன்மை நோக்கம்.!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நேரடி தலையீடு செய்து, இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை ஏற்பாடு…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் இருந்து சபைக்கு வந்த நாமல் : சபையில் அனுர அரசை கடுமையாகச் சாடல்!

சிறைச்சாலையில் இருந்து இன்று நாடாளுமன்றம் வந்து உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனது கைது அல்லது நிலுவையில் உள்ள…

103 0 0