கிளிநொச்சியில் ஆனந்தசங்கரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியைக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, மூத்த அரசியல்வாதியான வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து அமைச்சர் அன்புடன் விசாரித்தறிந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், வடக்கு மக்களின் நலன்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் சுமுகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட வீ. ஆனந்தசங்கரியைச் சந்தித்து அவருடன் உரையாடியமை தனக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்தச் சந்திப்பின் பின்னர் தெரிவித்தார்.