உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

இந்திய செய்திகள் 8 மணி நேரம் முன்
127 பார்வைகள்

இந்தியத் தலைநகர் டெல்லியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தின் போது, தென்மேற்கு டெல்லியில் உள்ள அந்த ஐந்து மாடி கட்டிடத்திற்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மீன்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.

ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய நேரில் கண்ட சாட்சிகள், உள்ளே சுமார் 24 முதல் 48 பேர் வரை இருந்ததாகத் தெரிவித்தனர்; எனினும், அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 

12 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும், ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தென்மேற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில், ஐந்து கல்லூரிகளைக் கொண்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள அந்த கட்டிடம், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை  மதியம் சுமார் 1:30 மணிக்கு (08:00 GMT) இடிந்து விழுந்தது.

அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள்; ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் ஏதும் இல்லாததால், கட்டிடம் இடிந்து விழுந்தபோது அவர்களில் பலர் தங்கள் அறைகளில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு

தமிழகச் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்துப் பேசினார். முதலமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி…

87 0 0
இந்திய செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை!

இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சட்டமன்றப் பதிலுரையின் போது பேசிய…

122 0 0
இந்திய செய்திகள்

மகாராஷ்டிராவில் தயிர்ப்பானை உடைக்கும் போட்டியில் விபரீதம் – சிறுவன் உட்பட இருவர் பலி!

மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியை காண்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இருந்த ஏழு வயது சிறுவன்…

140 0 0
இந்திய செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழக முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அநீதிக்கு எதிராக அறம் வெல்லும் என்றும், எத்தகைய சூழலிலும் கடமை…

83 0 0