உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

அமெரிக்க படையினருடன் இணைந்து இலங்கை விமானப்படை நடத்தும் கூட்டுப் பயிற்சி.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
70 பார்வைகள்

இலங்கை விமானப்படை, அமெரிக்க தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன், அமெரிக்காவின் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பசிபிக் வான்படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் – II 2026’ கூட்டு வான்படைப் பயிற்சி நடைபெற்று வருகின்றது.

இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க முகாமில் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி தொடங்கப்பட்ட இப்பயிற்சி, 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று செப்டெம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்தப் பயிற்சியானது கண்டி, திகன, கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியின் ஆரம்ப விழாவில், இலங்கை விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் தேசப்ரிய சில்வா உள்ளிட்ட விமானப்படைப் பணிப்பாளர் சபையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கட்டுநாயக்க விமானப்படைத் தள கட்டளை அதிகாரியும் பயிற்சி ஒருங்கிணைப்பு அதிகாரியுமான எயார் வைஸ் மார்ஷல் அமித ஜயமஹ, மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் வான்படை பிரிவின் உதவி அட்ஜூட்டன்ட் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் வெய்ன் தோமஸ் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் உட்பட இரு நாட்டுப் படைப்பிரிவின் உயர் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.தொ.கா. தலைவர் ஆழ்ந்த இரங்கல்.!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்துக்கு நேற்று நேரில் சென்று, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆழ்ந்த…

28 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரத்தில் எதிர்ப்புப் பேரணி நிச்சயம் நடக்கும்.!

அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணியைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், எனினும்…

52 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்.!

மூத்த தமிழ்த் தேசியவாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன்…

63 0 0
இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; வாள்களுடன் சிக்கிய ஐவர்.!

கொழும்பு, பொரளை பகுதியிலுள்ள வேளுவன வீதிக்கு அருகில் பொலிஸாரின் கட்டளையை மீறி அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்ற முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி,…

54 0 0