உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; வாள்களுடன் சிக்கிய ஐவர்.!

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
47 பார்வைகள்

கொழும்பு, பொரளை பகுதியிலுள்ள வேளுவன வீதிக்கு அருகில் பொலிஸாரின் கட்டளையை மீறி அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்ற முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, அதில் பயணித்த 05 பேரைக் கைது செய்துள்ளனர்.

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் இட்ட கட்டளையை மீறி, இந்த முச்சக்கரவண்டி நிறுத்தப்படாமல் தப்பித்து ஓடிய நிலையிலேயே பொலிஸார் அதனைப் பின்தொடர்ந்து சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து முச்சக்கரவண்டியை வழிமறித்துச் சோதனையிட்ட பொலிஸார், அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 கூர்மையான வாள்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 05 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொலன்னாவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொரளை மற்றும் கொம்பனித்தெரு பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்.!

நேற்றையதினம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து மேலும் தெரியவருகையில்,மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில்…

50 0 0
இலங்கை செய்திகள்

ஆட்சிகள் மாறினாலும் ஊடகர்கள் மீதான அச்சுறுத்தல்கள் நீங்காமல் தொடர்கின்றன.!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றமைக்காக அரச ஊடகம் ஒன்றில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளமை, காலத்துக்குக் காலம் ஊடகவியலாளர்கள் மீதான…

41 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

87 0 0
இலங்கை செய்திகள்

போ*தை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது.!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய…

54 0 0