உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க தீர்மானம்

இந்திய செய்திகள் 56 நிமிடங்கள் முன்
30 பார்வைகள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள இந்தத் தீர்மானத்தில், தமிழுக்கு வழங்கப்பட்டுள்ள செம்மொழி அந்தஸ்து மற்றும் சட்டத்துறையில் கலைச்சொற்களை உருவாக்குவதில் தமிழ் மொழி அடைந்துள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மின்னணு நீதிமன்றங்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான மொழிபெயர்ப்பு வசதிகள், சட்டத் தரவுத்தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, நீதித்துறையில் மொழிப் பயன்பாடு தொடர்பான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் இருப்பதுடன், சாட்சியங்களை பதிவு செய்வது உள்ளிட்ட நீதித்துறை நடவடிக்கைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளதாகவும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்படலாம்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புகள், ஆணைகள் மற்றும் ஏனைய நீதித்துறை உத்தரவுகளை தமிழிலும் கிடைக்கச் செய்வதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி தமிழக சட்டப்பேரவையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது தொடர்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானம் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு ஒப்புதல் வழங்கவில்லை என 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மாநிலங்களவையில் அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேள்வி நேரம் நிறைவடைந்த பின்னர் முதலமைச்சர் விஜய் இந்தத் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தீர்மானம் தொடர்பில் சட்டப்பேரவையில் விவாதம் இடம்பெறக்கூடும் எனவும், பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ரூ.4.5 கோடி பெறுமதியான திமிங்கல எச்சம் பறிமுதல் – ஒருவர் கைது

மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்க்லி மாவட்டத்தில் சுமார் ரூ.4.5 கோடி பெறுமதியான ஆம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர். சாங்க்லி…

59 0 0
இந்திய செய்திகள்

மகள்களின் கல்விக்காக வெறும் காலில் ஓடி வெற்றி பெற்ற தாய்

மகள்களின் உயர்கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் காலணிகள் இன்றி வெறும் காலில் மாரத்தான் ஓடி முதலிடத்தைப் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்…

67 0 0
இந்திய செய்திகள்

பிரிட்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளது. செப்டம்பர்…

86 0 0
இந்திய செய்திகள்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் மேட்டூா் அணையிலிருந்து பாசன வசதிக்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று(1) தண்ணீரைத் திறந்துவிடுகிறாா். இதற்காக சென்னையிலிருந்து வானூர்தி மூலம் சேலம் வானூர்தி நிலையத்துக்கு முற்பகல் 11…

73 0 0