உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

ரூ.4.5 கோடி பெறுமதியான திமிங்கல எச்சம் பறிமுதல் – ஒருவர் கைது

இந்திய செய்திகள் 47 நிமிடங்கள் முன்
58 பார்வைகள்

மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்க்லி மாவட்டத்தில் சுமார் ரூ.4.5 கோடி பெறுமதியான ஆம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர்.

சாங்க்லி கிராமப்புற காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து காஸ்பே திக்ராஜ் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே இந்தப் பறிமுதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரண்டு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த திமிங்கல எச்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோல்ஹாபூர் மாவட்டத்தின் குன்கி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய அமோல் சித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரால் இந்த திமிங்கல எச்சம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சம் மும்பை மற்றும் புனே உள்ளிட்ட பெருநகரங்களின் சட்டவிரோத சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாக சிந்துதுர்க் மாவட்டத்தின் குடால் பகுதியில் சுமார் ரூ.2.4 கோடி பெறுமதியான திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்படி, இரண்டு நாட்களுக்குள் மேற்கு மகாராஷ்டிர பகுதியில் மாத்திரம் சுமார் ரூ.7 கோடி பெறுமதியான திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெர்ம் திமிங்கலங்களின் செரிமான மண்டலத்தில் உருவாகும் மெழுகு போன்ற பொருளே ஆம்பர்கிரிஸ் எனப்படுகிறது. இது விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களில் நறுமணத்தை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.

மேலும், சில நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்திலும் இந்தப் பொருள் பயன்படுத்தப்படுவதால், சர்வதேச சந்தையில் இதற்கு அதிகளவான கேள்வி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க தீர்மானம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றை…

28 0 0
இந்திய செய்திகள்

மகள்களின் கல்விக்காக வெறும் காலில் ஓடி வெற்றி பெற்ற தாய்

மகள்களின் உயர்கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் காலணிகள் இன்றி வெறும் காலில் மாரத்தான் ஓடி முதலிடத்தைப் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்…

67 0 0
இந்திய செய்திகள்

பிரிட்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளது. செப்டம்பர்…

85 0 0
இந்திய செய்திகள்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் மேட்டூா் அணையிலிருந்து பாசன வசதிக்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று(1) தண்ணீரைத் திறந்துவிடுகிறாா். இதற்காக சென்னையிலிருந்து வானூர்தி மூலம் சேலம் வானூர்தி நிலையத்துக்கு முற்பகல் 11…

72 0 0