உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

ஆட்சிகள் மாறினாலும் ஊடகர்கள் மீதான அச்சுறுத்தல்கள் நீங்காமல் தொடர்கின்றன.!

இலங்கை செய்திகள் 38 நிமிடங்கள் முன்
40 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றமைக்காக அரச ஊடகம் ஒன்றில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளமை, காலத்துக்குக் காலம் ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகள் எவ்வாறெல்லாம் தொடர்கின்றன என்பதைப் புலப்படுத்துகின்றன என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் 5ஆம் ஆண்டு நினைவு தினமானது யாழ். ஊடக அமையத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மறைந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் உடல்நலக் குறைபாடுகளுக்கு மத்தியிலும் தனது இனத்தின் வலிகளை நீக்குவதற்காகத் தன்னால் முடிந்தளவு உழைத்தவர்.

ஊடகவியலாளர்களின் நினைவு தினங்களின்போது அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.

நெருக்கடிகள் அனைத்துக்கும் தீர்வு தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியினர், தற்போது முன்னைய காலங்களை விட நெருக்கடி மிகுந்த சூழ்நிலைக்குள் ஊடகவியலாளர்களைத் தள்ளியுள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் செய்தி சேகரிக்கச் சென்றமைக்காக அரச ஊடகத்தில் பணியாற்றிய யாழ். ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் பணியிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கின்றமை இதற்குச் சான்றாகும்.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருப்பது போன்று, அந்த அடக்குமுறைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் ஆட்சிகள் மாறினாலும் தொடர்கதையாகவே உள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; வாள்களுடன் சிக்கிய ஐவர்.!

கொழும்பு, பொரளை பகுதியிலுள்ள வேளுவன வீதிக்கு அருகில் பொலிஸாரின் கட்டளையை மீறி அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்ற முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி,…

45 0 0
இலங்கை செய்திகள்

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்.!

நேற்றையதினம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து மேலும் தெரியவருகையில்,மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில்…

48 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

83 0 0
இலங்கை செய்திகள்

போ*தை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது.!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய…

53 0 0