உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

எகிப்துக்கு சீன ஜனாதிபதி பயணம்

உலக செய்திகள் 47 நிமிடங்கள் முன்
43 பார்வைகள்

மேற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்சிசியை சந்தித்த ஷி ஜின்பிங், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சர்வதேச அரங்கில் நிலவும் தன்னிச்சையான ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் என ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சர்வதேச விவகாரங்களில் நியாயமான மற்றும் சமத்துவமான நிர்வாக நடைமுறையை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை நிலைப்பாட்டுக்கு எகிப்து தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்சிசி உறுதியளித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச எரிபொருள் விநியோகத்துக்கான முக்கிய மாற்றுப் பாதையாக காணப்படுகிறது.

அத்துடன், அரபு நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே சமரசப் பங்காளியாக சீனா தன்னை முன்னிறுத்துவதற்கும், எகிப்துடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக எகிப்துடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை முன்னெடுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.…

40 0 0
உலக செய்திகள்

காசாவில் இருந்து பின்வாங்க முடியாது – நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை!

காசாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “மஞ்சள் கோடு” எல்லைக் கோட்டிலிருந்து இஸ்ரேலியப் படைகள் ஒருபோதும் பின்வாங்காது என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக அறிவித்துள்ளார். காசாவிலுள்ள ராணுவ…

82 0 0
உலக செய்திகள்

தவிர்க்க முடியாத கட்டத்தில் அமெரிக்கா-ஈரான் போர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் இல்லாத, அதேசமயம் முழு அளவிலான போரும் இல்லாத ஒரு பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், இது எந்த…

63 0 0
உலக செய்திகள்

திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல்; குழந்தை உட்பட 05 பேர் உயிரிழப்பு.!

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில்…

44 0 0