ஆடு திருடியவர் சிக்கினார்.!
மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆட்டை பிடித்து சிறிய ரக வானில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் ஆட்டின் உரிமையாளர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து, பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்து, ஆட்டை கடத்திச் சென்ற வாகனத்தை அடையாளம் கண்டனர்.
இதன் அடிப்படையில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டதுடன், ஆட்டை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய ரக வேனும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீண்டகாலமாக வாகனங்களில் ஆடு, மாடுகளை கடத்தி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.